திங்கள், 15 ஏப்ரல், 2013

அறநெறியை போற்றும் பழமொழிகள்

  1. கதவின் வழியாக அநியாயமாக வரும் செல்வம். ஜன்னல்களின் வழியாக வெளியே செல்கிறது. - பழைய எகிப்திய வாக்கு

  2. மகாவுன்னத ஆட்சி அதிகராமானாலும், ஒழுங்கு முறை தவறினால் அழிந்து போகும். - ப்யூப்லிலியஸ் வைரஸ்

  3. சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா. அல்லது வானத்தைக் காண்பதா? உன் இஷ்டம். - ரஸ்கின்

  4. தேவையான பொருளுதவி செய்து விதவைகளையும் ஏழை களையும் வாழ்விப்பவன் இறைநெறியில் ஒரு பெருங் கொடையாளிப் போலவும், இரவு முழுவதும் தொழுபவனைப் போலவும், எப்போதும் நோம்பு நோற்பவனைப் போலவும் இருக்கிறான். - நபிகள் நாயகம்

  5. பணம் உண்டானால் முயற்சி உண்டு; வல்லமையும் உண்டு. - இந்தியப் பழமொழி

  6. ஒருவனுடைய கருத்துக்களைக் கேட்பதற்கு உலகம்  எப்போதுமே ஆவலாய் இருப்பதில்லை. - காந்தியடிகள்

  7. ஒழுக்கமற்ற செயல்களால் உயர்வான வாழ்க்கை அமைவது தடைபடுகிறது. - பழமொழி

  8. நாளைய வெற்றிக்கு இன்றையதின்னம் விதைப்போடு. - ஒர் அறிஞர்

  9. அளவுக்கு மீறிய செல்வமும், அளவுக்கு மீறிய வறுமையும் ஆபத்தானவை. - பழமொழி

  10. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும், இருளுக்கும் பயப்படத் தேவையில்லை. - பழமொழி

  11. எதிர்ப்பும் தடையும் இருந்தால்தான். மனிதன் விரைந்து முன்னேறுவான். - புத்தர்

  12. ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஒருமுறை முடிவெடுங்கள். - எட்மண்ட் பர்க்

  13. உயிரோடுள்ள மனிதன் தனக்குதானே கட்டிக் கொள்ளும்  கல்லறையே சோம்பல். - டெய்லர்

  14. விவேகத்தின்  தந்தை அனுபவம், விவேகத்தின் தாய்  நினைவாற்றல். - பழமொழி

  15. வாழ்க்கை என்றால் அது ஒரு துணிச்சல் நிறைந்த விடாமுயற்சி என்றுதான் பொருள். - ஹலன் கெல்லர்

  16. நீச்சல் போடுகிறவனுக்குத்தான் அலையின் வேகம் என்னவென்று தெரியும். - பழமொழி

  17. தொண்டு செய்! அன்பு செய்! பரிசுத்தவனாகு! மெய்உணர்வுகொள்! நல்லவனாக இரு! - விவேகானந்தர்

  18. உன்மனதையும் உள்ளுணர்வையும் பின் தொடர்ந்து செல்   அவற்றுக்குத் தெரியும் நீ என்னவாக ஆகப்பேகிறாய் என்பது. - ஸ்டீவ் ஜாப்ஸ்

  19. நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்குச் செய்யும் சேவையாகும். - பழமொழி

  20. நேற்று செய்ய முடியாததை இன்று செய்து கொண்டிருக்கிறாய். இன்று செய்ய முடியாததை நாளை செய்து முடிப்பாய். - லெனின்

செயலாக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழிகள்


  1. பிழையைச் சரிபடுத்திக்கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி

  2. எதிர்ப்புகளைத் தாங்குவதற்காகத்தான் இதயம் படைக்கப்   பெற்றிருக்கிறது. - டேவிட் ஹயூம்

  3. காற்றுக்கு சாயும் நாணல்தான் காலத்துக்கும் நிலைக்கும். - பழமொழி

  4. துன்பத்தைத் துனிவோடு தாங்குவதைப் போல, இந்த உலகில் பாராட்டத் தகுந்த செயல் எதுவுமில்லை. - செனீகா

  5. தன் தப்பு பிறருக்கு சத்து.  - பழமொழி

  6. எது எதில் சத்தியத்தைக் காண்கிறீர்களோ, அது அதை ஆனமிகமாகப் போற்றுங்கள். - ஈராஸ்மஸ்

  7. கடவுளை இதயம் முழுவதையும் கொண்டு தேடினால் அவனை நிச்சயம் காண்பாய்.  - எபிரேய மதம்

  8. குணம் பெரியதேயன்றி குலம் பெரியதல்ல. - பழமொழி

  9. பணம் பேச ஆரம்பிக்கும்போது நியாயம் மௌனம் சாதிக்கிறது. -ரஷ்

  10. இன்சொல் வழங்குவதால் நாக்குக் காயமுறுவதில்லை. - ஹேவுட்

  11. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும். - பழமொழி

  12. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரேவிதமான இதயம்தான் துடிக்கிறது. - மாத்யூ ஆர்னால்டு

  13. நாட்டுப் பற்றை விட அதக நெருக்கமான அன்பு வேறில்லை. - பிளேட்டோ

  14. நண்பனை, பலருக்கு நடுவில் புகழ்ந்து பேசுங்கள்; தனிமையில் கண்டித்துத் திருத்துங்கள். - ஆங்கிலப் பழமொழி

  15.  தீய மனிதர்கள் பயத்துக்குக் கீழ்ப்படிகிறார்கள். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகிறார்கள். - அரிஸ்டார்டில்

  16. ஒவ்வொன்றிலும் நன்மையும், தீமையும் இருக்கிறது.அதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் எல்லாக் கலையும். - ஒர்  அறிஞர்

  17. அறநெறி நிற்போர் அனைவரும் குழந்தை உள்ளம் உடையவர். - தாவோ (சீனம்)

  18. உண்மை பேச இருவர் வேண்டும். ஒருவர் பேசுவதற்கு; மற்றொருவர் கேட்பதற்கு. - தோரோ

  19. ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக் கொள்வாய். - ஸ்பானியப் பழமொழி

  20. வட்டி வாங்குகிறவர், வட்டி கொடுப்பவர், அது தொடர்பான   ஒப்பந்தங்களை எழுதுகிறவர். அதற்கு சாட்சி கூறுவோர் - இவர்கள் யாவரும் ஒரே விதமான குற்றத்தையே செய்கிறார்கள். - நபிகள் நாயகம் 

வாழ்க்கை நெறியை குறிப்பிடும் பழமொழிகள்


  1.  சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத்  தவிர்த்திடு. - டால்ஸ்டாய்

  2.  உயர்ந்த பண்பாடு என்னும் சிறைக்குள் அடைப்பட்டு,  அதைப் பயில நேர்மை எனும் சட்ட திட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்க   முடியும். - கவிஞர் தாகூர் 

  3. பண்பில்லாதவன், பெற்ற பெருஞ் செல்வம் பயனற்று   போகும். - பழமொழி 

  4. உலகில், நான்! என்னைத் தவிர வேறு ஓர் சகோதரனைக்   குறை சொல்ல மாட்டேன்; என்குறைகள் எனக்குத் தெரியும். - ஷேக்ஸ்பியர் 

  5. நம்மால் எங்கே இந்தப் பெரிய காரியத்தைச் செய்ய   முடியும் என்று நினைத்து நல்ல செயல்களைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம்   நிரம்பிவிடும். - புத்தர் 

  6. நாம் மேலே போகும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கிழே வரும்போது அது முடியாது. - நெப்போலியன் 

  7. செய்யும் காரியங்களை மிகைப்படுத்துகிறோம். தகாத வெற்றிகளை அடைகிறோம். தோல்வியடையும்போதோ   இவையெல்லாவற்றையும் விட அதிக கசப்படைகிறோம். - சிரில் 

  8. எனக்கு ஏன் சிலை வைக்கப்பட்டது என்று யாராவது கேட்பதைவிட, எனக்கு ஏன் சிலை அமைக்கப்படவில்லை  என்று கேட்பதையே நான் விரும்புகிறேன். - மார்கஸ் காடோ 

  9. தண்ணீரில் ஏற்படும் வட்ட அலைகள் பெரிதாகிக்கொண்டே   போய்க் கடைசியில் மறைந்துவிடும்; அது போல் புகழும்  பெருகிக்கொண்டே போய்க் கடைசியில் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடும். - ஷேக்ஸ்பியர்

  10. சிறந்த செயல்கள் எல்லாம் நல்லவையல்ல. நல்லச்   செயல்கள் எல்லாமே சிறந்தவை! - பழமொழி 

  11. தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை  வென்றவனைவிட மேலானவன். - மாகவீரர் வாக்கு 

  12. ஒருவன் தான் செய்த குற்றத்தைக் காட்டிலும், அந்தக் குற்றத்தை உணர்ந்து, அதற்காகப் பரிதாபப் படாமல்  இருப்பதே பெரிய குற்றமாகும். - பெய்ஸன் 

  13. இந்த உலகத்தில் விஷத்தினால் அழிந்தவர்களைக்காட்டிலும் பொன்னாசையால் அழிந்து போனவர்களே அதிகம். - ஷேக்ஸ்பியர்

  14. என்னைக் கறையின்றி வாழ விடு. அல்லது யாருமே   அறியாவண்ணம் இறக்க விடு. ஓ! என்க்குக் கௌரமான புகழைக் கொடு அல்லது எதுவுமே வேண்டாம். - அலெக்ஸாண்டர் போப்

  15. உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள்  ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளில்   எவ்வளவு தர்மம் செய்கிறோம் எனபதில்தான் இருக்கிறது. - கவி தாகூர் 

  16. நாயோடு தாராளமாகப் பழகலாம். ஆனால் முன் யோசனையுடன் கையிலுள்ள குச்சியை மட்டும் நழுவ  விட்டுவிடாதீர்கள்! - அரேபியப் பழமொழி

  17. பிறரைவிடத் தான் புத்திசாலி என்ற ஜம்பம் பேசுபவன்  சமயத்தில் சாய்ந்துவிடுகிறான். - ஈசாப்

  18. சம்பளம் இல்லாத உத்தியோகம், திருடர்களின் பிறப்பிடம். - ஜெர்மானியப் பழமொழி

  19. மூட நம்பிக்கையா? அது ஒர் அருவருக்கதக்க பொருள்;    நசுக்கிப் போடு அதை. தயங்காதே! - வால்டேர் 

  20. இறைக்க இறைக்க நீர் ஊறும், உழைக்க உழைக்க பணம் சேரும். - பழமொழி       

  21. விருப்பத்திற்குக் குறைவாய்ப் பெறுபவன், தகுதிக்கு அதிகமாகப் பெறுவதாக அறியக்கடவன். - ஷோபனார்

  22. மன மகிழ்ச்சியே உடல் நலத்திற்கு முக்கிய காரணம். - மார்பி

காலத்தை வென்ற பழமொழிகள்.

  1. இருள், இருள்’ என்று    சொல்லிக் கொண்டிருப்பதை விட,   ஒரு சிறிய மெழுகு வர்த்தியைத் தேட முயற்சி செய்வது நலம். - கன்பூஷியஸ்

  2.   நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும் படி ஏற்படக் கூடாது. - ஔவையார்

  3.  கர்வம் கொண்டிருப்பவனைக் கண்டு வெற்றித் திருமகள் விலகி விடுகிறாள். - மெகலன் 

  4.  பாவச் செயல்கள் முடிவில் துயரத்தை தரும்.  - மகாவீரர்

  5.  ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்வது கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.   - விதுரநீதி

  6.  எங்கு போனாலும் சரி, உன் முழு இதயத்துடன் போ.  - கன்பூசியஸ்

  7.  இந்த உலகப் பொருள்களின் பின்னால் செல்லாதீர்கள். அவை உங்கள் சக்தியை வீணாக்கி, மன உறுதியை பலவீனமாக்குகின்றன. - கீதைச் சிந்தனை

  8.  இனிப்பான வாழ்க்கையையும் வரம்போடுதான் அனுபவிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் தெரிந்துகொள்ளத்தான் இறைவன் இனிப்பான கரும்புக்கு   கனுக்கள் வைத்திருக்கிறான். - குரு சுரஜானந்

  9.  நம்முடைய வருவாயில் ஒரு சிறிய பாகமாவது ஏழைகளுக் கென்று ஒதுக்கி வைத்து, அதனை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத  நலனைத் தேடிக்கொள்ள வேண்டும். - அருணகிரிநாதர்

  10.  சிறந்த எண்ணங்களின் இருப்பிடம். சிறந்த செயல்களின் பிறப்பிடமாகின்றது.                          - பழமொழி

  11.  எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும், அதை உன்னிடம் திருத்திக்கொள்.    - ஆங்கிலப் பழமொழி

  12.  ஒருவன் பலத்தினால் மற்றவர்களை அடக்கினால் அவர்கள் மனப்பூர்வமாக அடிபணிய மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பதற்குப் பலமில்லாததால்தான் அடிபணிகிறார்கள். -மென்ஷியஸ் 

  13.  தீய நெறியில் செல்லாதிருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதைவிட, நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி  அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச்  செய்யவதே நலம். - பித்தாகோரஸ்

  14.  ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது. - வைல்டர்

  15.  ஒருவரின் துன்பத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். நீங்களே அதற்கு ஆளாகி விடலாம். - கிராமத்துப் பழமொழி

  16.  நீ துயருறும் காரணம் எதுவாயினும் பிறருக்கு  இன்னாதனவற்றைச் செய்யாதே. - புத்தர்

  17.  அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான். - மகாவீரர் வாக்கு

  18.  இந்த உலகம் ஒர் மிகப்பெரிய உடர்பயிற்சிக் கூடம். இங்கு  நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக்  கொள்ளத்தான் வந்திருக்கிறோம். - சுவாமி விவேகானந்தர்

  19. மலைப்போன்ற பிரச்சனைகளையும். நம்பிக்கை என்ற சிறு உளியைக்கொண்டு சிறுக சிறுக துளைத்துவிடலாம். -   பழமொழி