இருள், இருள்’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஒரு சிறிய மெழுகு வர்த்தியைத் தேட முயற்சி செய்வது நலம். - கன்பூஷியஸ்
நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும் படி ஏற்படக் கூடாது. - ஔவையார்
கர்வம் கொண்டிருப்பவனைக் கண்டு வெற்றித் திருமகள் விலகி விடுகிறாள். - மெகலன்
பாவச் செயல்கள் முடிவில் துயரத்தை தரும். - மகாவீரர்
ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்வது கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும். - விதுரநீதி
எங்கு போனாலும் சரி, உன் முழு இதயத்துடன் போ. - கன்பூசியஸ்
இந்த உலகப் பொருள்களின் பின்னால் செல்லாதீர்கள். அவை உங்கள் சக்தியை வீணாக்கி, மன உறுதியை பலவீனமாக்குகின்றன. - கீதைச் சிந்தனை
இனிப்பான வாழ்க்கையையும் வரம்போடுதான் அனுபவிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் தெரிந்துகொள்ளத்தான் இறைவன் இனிப்பான கரும்புக்கு கனுக்கள் வைத்திருக்கிறான். - குரு சுரஜானந்
நம்முடைய வருவாயில் ஒரு சிறிய பாகமாவது ஏழைகளுக் கென்று ஒதுக்கி வைத்து, அதனை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத நலனைத் தேடிக்கொள்ள வேண்டும். - அருணகிரிநாதர்
சிறந்த எண்ணங்களின் இருப்பிடம். சிறந்த செயல்களின் பிறப்பிடமாகின்றது. - பழமொழி
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும், அதை உன்னிடம் திருத்திக்கொள். - ஆங்கிலப் பழமொழி
ஒருவன் பலத்தினால் மற்றவர்களை அடக்கினால் அவர்கள் மனப்பூர்வமாக அடிபணிய மாட்டார்கள். அவர்கள் எதிர்ப்பதற்குப் பலமில்லாததால்தான் அடிபணிகிறார்கள். -மென்ஷியஸ்
தீய நெறியில் செல்லாதிருக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதைவிட, நல்ல விஷயங்களில் மனதைச் செலுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்யவதே நலம். - பித்தாகோரஸ்
ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத் தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது. - வைல்டர்
ஒருவரின் துன்பத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். நீங்களே அதற்கு ஆளாகி விடலாம். - கிராமத்துப் பழமொழி
நீ துயருறும் காரணம் எதுவாயினும் பிறருக்கு இன்னாதனவற்றைச் செய்யாதே. - புத்தர்
அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுகிறான். - மகாவீரர் வாக்கு
இந்த உலகம் ஒர் மிகப்பெரிய உடர்பயிற்சிக் கூடம். இங்கு நம்மை நாம் வலிமையுடையவர்களாக்கிக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம். - சுவாமி விவேகானந்தர்
மலைப்போன்ற பிரச்சனைகளையும். நம்பிக்கை என்ற சிறு உளியைக்கொண்டு சிறுக சிறுக துளைத்துவிடலாம். - பழமொழி
திங்கள், 15 ஏப்ரல், 2013
காலத்தை வென்ற பழமொழிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக